Saturday 13 December 2014

வரலாறும்,வானமே எங்கள் வீதியும்...!








அந்த நபர் யார்...? விடை ஹிட்லர்...!

.
உலக வரலாற்றில் நடுநடுங்கவைத்த மிக கொடூரமான சம்பவங்கள் அது...விடை நாளை...


யூதர்களை பற்றிய ஹிட்லர் அபிப்பிராயம்....படிக்கவே பயங்கரமானவை,சில வரிகள் நாளை....

இரண்டாம் உலகப்போர் எப்படி எங்கே பிள்ளையார் சுழி போடப்பட்டது...விடை
நாளை...

சில மணிக்குள் ஒரு குட்டி நாடு சுடுகாடு ஆகிவிட்டதற்கு, முக்கிய காரணமாக சொல்லப்படும் அந்த சம்பவம் பற்றிய விவரம் நாளை...




நம் இளம் கதாநாயகி  ஹன்னா பற்றிய சரித்திர தகவல் நாளை...



நாளை...?




வரலாறும்,வானமே எங்கள் வீதியும்...! (நிறைவு பகுதி)

1.மாக்ஸ் ஏன் கைது செய்யப்படுகிறான் ?
2. மாக்ஸ்,வெர்னர் உருவ ஒற்றுமையின் உள்ளார்த்தம் என்ன ?
3.வெர்னர் பற்றிய தகவலே கூறப்படவில்லையே ?
4.போலந்து புரட்சியாளர்களிடம் மாட்டிகொண்ட'வெர்னர்' இளவயது சிறுவனா ?
5.ஹிட்லர் முசோலினி ஆரம்பத்தில் எதிரிகளா ?
6.நண்பனுக்காக விரல்களை வெர்னர் வெட்டிக்கொண்டானா  ?
7.கடைசியில் தான் ஹன்னா மாக்சை அடையாளம் தெரியுமா என்ன ?
8.ஓட்டோ முசோலினிஐ தப்பிக்க வைத்தவரா,அவரிடமிருந்து தப்பியவரா ?

என இப்படி முதல் வாசிப்பில் வா.எ.வீ கதையை  படித்தபோது சில சந்தேகங்கள் வந்தாலும், இரண்டாம் வாசிப்பில் பல எளிதாக புரிபவையே.

என் ஆராய்ச்சிக்கு காரணம் புத்தகம் கைக்குகிடைத்த நாள்-டிசம்பர் 7.

இதே நாளில்தான் 'பியரல் ஹார்பர்' தாக்குதல் நடந்தது. அடடே...இந்த கதைக்கு வேறேன்ன என்ன தொடர்புகள் என சின்னதாய் தேடியவை..கொஞ்சம் நீண்டுவிட்டது...!

எளிதாக பயணிக்கும் இந்த கதையின் வரலாற்று பின்னணி பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டவை சுவையானவை...!

முக்கியமாக செல்வம் அபிராமியுடன் வரலாற்று நிகழ்வுகள் பற்றியும்,மிஸ்டர் மரமண்டையுடன் வெர்னர் விரல்களை வெட்டிகொண்டான் என்பதை மறுத்து மெயிலிலும், கண்ணன் ரவியுடன் நேரிலும் பகிர்ந்து கொண்டவைகள்..!

பகிர்ந்ததில் முடிவாக எடுத்த சில குறிப்புகள், கணிப்புகளுடன் இந்த பதிவின் முடிவுரை+கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பார்க்க...






107 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இனிமேல், ஒவ்வொரு முறையும் ஒரு அடடே, அட்டகாஷ்! கமெண்ட் போடணும் என்ற அளவுக்கு சிறப்பான அப்டேட்டுகள்.

      Delete
    2. @ King Viswa
      நேற்று முழுவதும் கரண்ட இல்லாததால் உங்கள் பாராட்டை கவனிக்க தவறிவிட்டேன்...நன்றிகள் விஸ்வா !

      Delete
  2. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. @ கிங் விஸ்வா
    வரலாறு விஷயம்...தவறுசெய்ய கொஞ்சம் வாய்ப்புகள் உண்டு, உங்கள் கழுகு கண்கள் கண்டுபிடித்தால் ,தகவல்..ப்ளிஸ்...!

    ReplyDelete
  4. தொடர்ந்து கலக்குங்க சிவாஜீ!அற்புதம்!

    ReplyDelete
    Replies
    1. @ saint satan
      நீங்கள் தான் 'வெட்டி ஆபிஸ்ர்' குருப்பில் கலக்குரீங்களாமே...என் tap சர்விஸ்
      சென்று 1 மாதம் ஆகிவிட்டது...சில நாளில் கைக்கு வரும் எதிர்பார்க்கிறேன்...அதுவரை உங்கள் கலக்கலை பார்க்கமுடியாத குறை...ம்...

      Delete
  5. தொடருங்கள் சார் ;)

    ReplyDelete
    Replies
    1. @ Paranitharan K
      போராட்ட குழுதலைவரரே...உங்கள் கட்டளை படியே செய்கிறேன்...!

      Delete
  6. தொடர்ந்து எழுதுங்கள் ....வாழ்த்துக்கள்!!!!!! :-)

    ReplyDelete
    Replies
    1. @selvam abirami
      //கண்ணன் !.......நீங்கள் கேட்ட இந்த கேள்வி மிகவும் சரியானது ....
      இது மொழிபெயர்ப்பாளர் செய்த தவறு......பக்கம் 79-ல் OTTO SKORZENY முசோலினியை தப்பிக்க வைத்த தீரர் என்றுதான் இருந்திருக்க வேண்டும்...
      முசோலினியிடம் அகப்படாமல் தப்பி வந்த தீரர் என்று இருப்பது ஓர் சிறு பிழைதான்......
      OTTO SKORZENY ஒரு கற்பனை பாத்திரமல்ல.....இதோ கீழே வரும் லின்க்-ல் பாருங்களேன்.....
      http://en.wikipedia.org/wiki/Otto_Skorzeny#Liberation_of_Mussolini //

      நண்பரே நீங்கள் குறிப்பிடுவதுபோல அது எழுத்து பிழை அல்ல...சரி என்றே எனக்கு படுகிறது...1925 to 1938 முசோலினி வரலாறை கொஞ்சம் அலசிப்பாருங்கள்...!

      Delete
    2. மாயாவிஜி !!!!! Otto skorzeny முசோலினி சந்திப்பு செப்டம்பர் 1943 தவிர வேறு எப்போதும் நடந்ததாக தெரியவில்லையே ?????....அந்த முசோலினி rescue சந்திப்புதான் அவர்களின் முதல் சந்திப்பு என்பதற்கான ஆதாரம் அவர்களின் உரையாடல்தனில் வெளிப்படுகிறது ...

      நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ஜீ ????

      Delete
    3. @ selvam abirami

      முசோலினியும் இட்லரும் ஆரம்பத்தில் எதிரிகளாகத்தான் இருந்தனர்.
      முசோலினியின் பாசிசக் கட்சியில் யூதர்கள், யூதரல்லாதவர், யூதபகைமை என்ற கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை.ஹிட்லரின் நாஜி கட்சியின் முதல் நோக்கம் யூதர்களை கொன்றுகுவிப்பது...
      1938 ல் இட்லரின் தாக்கம் இத்தாலியில் அதிகமிருந்த நேரத்தில்,வேறு வழியின்றி முசோலினி,ஹிட்லருடன் கைகோர்த்தார்.
      அதிக விவரம் அடுத்த பதிவில்...நண்பரே...!

      Delete
  7. சஸ்பென்ஸ் தாங்கலையே ...

    ReplyDelete
    Replies
    1. @ Rummi XIII
      இதில் சஸ்பென்ஸ் என்ன இருக்கிறது..எல்லோருக்கும் தெரிந்த நபர் தான்.. பழைய சரித்திரம்தானே...!

      Delete
    2. அட ரம்மி நக்கல் பண்றாருங்க.!:)

      Delete
    3. ஆ ! ரம்மி கிண்டல் செய்கிறாரா?.......!!!! அப்படியானால் சலசலக்கும் நதியை ரம்மி வீட்டுக்கு அனுப்பி 10 நாள் அவள் சமையலை சாப்பிட வைக்க வேண்டியதுதான் ;-)

      Delete
  8. அட்டகாசமான தொடக்கம் மாயாவி அவர்களே! வழக்கமாக, வரலாற்றுப் பாடம்னாலே நான் தூங்கி வழிவேன்... நான் தூங்காமல் கதை சொல்லவேண்டியது உங்கள் பொறுப்பு! ஏதாவது எழுதி, எப்படியாவது 'வானமே எங்கள் வீதி'யை புரிய வச்சுடுவீங்கன்னு நம்புறேன்! ;)

    ReplyDelete
    Replies
    1. @ Erode VIJAY
      என்ன ஆயிற்று என அவ்வப்போது விசாரித்து நான் துங்கிவிடாமல் பார்த்துகொள்ளுங்கள்..விஜய்...!

      Delete
  9. புதிய விஷயங்களை உங்கள் மூலம் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. @ abujack ravanan

      உங்கள் ஆவலை போலவே நானும் ஆவலாக தகவல்களை சேகரித்துகொண்டுள்ளேன்...ராவணன்...!

      Delete
  10. என்னமோ போங்க மாயாவி.!

    ReplyDelete
    Replies
    1. உங்களோடது உண்மையாவே black spot மாயாவி.!ஹிஹிஹி.!

      Delete
  11. என்னைப் பொறுத்தவரை இந்தத் தொடர் மிகவும் சுவாரசியமான ஒன்று நண்பரே ! தினசரி ஒரு 'கிளிக்' என்பது அருமையான முடிவு, ஒவ்வொரு 'கிளிக்' கையும் தினம் ஒரு முறை மனதார வரவேற்கிறேன். இடையில் நிறுத்தி விடாமல் இந்தத் தொடர் முழுமை அடையும் வரை தொடர்ந்து பதிவிடவும் !

    ReplyDelete
    Replies
    1. @ மிஸ்டர் மரமண்டை

      உங்கள் அரவணைப்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் நண்பரே...! உங்கள் பதிவில் //லெப்டினென்ட் மாக்ஸ் குர்ட்மேனாக வருவது உண்மையில் 'வெர்னர் கோனிக்ஸ் பெர்க்' ஆகத் தான் இருக்க முடியும் என்பதே அது... கடைசிப் பக்கம் முடிந்தவுடன் பரபரவென்று முன்பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால், வெர்னரின் முகச்சாயல் அப்பட்டமாக மாக்ஸிடம் தெரிகிறது. தன்னுடைய ஆத்ம நண்பனுக்காக தன் வலது கையின் இரண்டு விரல்களைக் கூட வெட்டிக் கொள்ளும் துணிவு கொண்டவன் தானே வெர்னர்?//
      நீங்கள் குறிப்பிட்டதுபோல் எனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்தது...ஆனால்
      பல தகவல்களை ஒருங்கிணைத்து பார்த்தபோது விஷயம் அப்பிடியில்லை நண்பரே...இதுபற்றி முறையாக உங்களிடம் ஒரு கருத்தை 2நாள் பொறுத்து பெறுகிறேன்...!
      உங்கள் கருத்தைபெற எப்பிடி தொடர்பு கொள்வது என்பதுதான் என் முன் நிற்கும் பெரிய கேள்வி...ஈமெயில்...வேறு வழிகள்...?

      Delete
    2. maramandaiii@gmail.com

      Delete
    3. @ மாயாவி

      சபாஷ்! நம்ம அடுத்த ஆப்பரேசன்? ;)

      Delete
    4. @ Erode VIJAY

      அடுத்த ஆப்பரேசன் துவங்கிவிட்டது....நண்பருக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.

      Delete
  12. Replies
    1. @ King Viswa

      விஸ்வா...அவர் ஈமெயில் id தானே கொடுத்தார்.அவருடைய id யா கொடுத்தார் :)

      Delete
  13. நல்ல முயற்சி நல்ல முயற்சி நண்பரே ... தொடர்ந்து கல

    ReplyDelete
    Replies
    1. நல்ல முயற்சி நண்பரே ... தொடர்ந்து கலக்குங்கள் ....

      Delete
  14. +1

    தொடருங்கள் ...........!

    ReplyDelete
    Replies
    1. @ Satishkumar S

      நண்பர்கள் தூக்கத்தை போக்கும் வரலாற்று தகவல் ஏதாவது இருப்பின் சொல்லுங்கள் சதிஷ்...!

      Delete
  15. அடுத்த 'இங்கே க்ளிக்'குக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.....

    ReplyDelete
  16. வரலாற்று ஆர்வம் வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. @ சேலம் Tex விஜயராகவன்

      வாழ்த்தை கொஞ்சம் திருத்தலாமா,இப்படி....
      என் வரலாற்று ஆர்வத்தை தூண்டிய காமிக்ஸ் வாழ்க...!
      (இதுதான் சரி சேலம் டெக்ஸ்...)

      Delete
  17. மரணத்தை எதிர்கொள்ள மாதக்கணக்கில் வரிசையில் நின்றிருந்ததெல்லாம் கொடுமை!!

    ReplyDelete
    Replies
    1. @ Erode VIJAY

      'நிலமெல்லாம் ரத்தம்' படித்ததில்' மனமெல்லாம் கணம்'...நண்பரே :(

      Delete
  18. அடடா. நான் ஸ்கூல் படிக்கிறப்போ இப்பிடி போட்டோ போட்டு விளக்கம் சொல்லியிருந்தால் ஹிஸ்டரியில நல்ல மார்க் வாங்கியிருப்பேனே.

    ReplyDelete
    Replies
    1. @ COMICSPRIYAN@SALEM.AMARNATH

      எனக்கும் அப்படித்தான் நண்பரே...பள்ளியில் மதனின் 'வந்தார்கள்...வென்றார்கள்...' புக் கொடுத்திருந்தால், ஹிஸ்டரியில் ஐயா ஸ்டேட்'பாஸ்ட்' தெரியுமா... :) (உண்மையில் ஜஸ்ட் பாஸ்..)

      Delete
  19. நல்ல முயற்சி. ஒவ்வொரு முறையும் நான் பார்த்து வியப்பது உங்களின் photoshop வித்தையைதான். கலக்குங்கள்

    ReplyDelete
    Replies
    1. @ Raj Muthu Kumar S

      வியக்கும் அளவிற்கு அப்படி ஒன்றும் இல்லை ராஜ்...நான் பார்த்து வியந்தவற்றுக்கு எதிரில் அடியேன் ஒரு சின்ன கட்டெறும்பு....!

      Delete
  20. "இன்று ஒரு தகவல்" பாணியில், "இன்று ஒரு படம்" அல்லது உங்கள் பாணியில் சொல்வதென்றால் "இன்று ஒரு இங்கே க்ளிக்"-கா?! :) சிவாவின் முத்திரையுடன், (கண்ணைப் பறிக்கும்) வண்ண மயமான வரலாற்றுத் தகவல் தொகுப்பு!

    ReplyDelete
    Replies
    1. @ Karthik Somalinga

      'இன்று ஒரு தகவல்' தென்கச்சி.கோ.சுவாமிநாதனை இங்கு நினைவு கூறியதற்க்கு நன்றி, கார்த்திக். அவருடைய தகவலுக்கு தினசரி காலை 7:35 க்கு ரேடியோவின் முன்பு காத்திருந்து பதிவும் செய்வேன்.1987 ல் தொடங்கிய பழக்கம்,சுமார்1000 தகவல்களை ரேடியோவில் திரும்ப,திரும்ப ஒலிபரப்புவதை கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்தேன். கல்கண்டில் வந்த 'தென்கச்சி பக்கமும்' என் சிறந்த சேகரிப்பில் ஒன்று..!

      Delete
    2. @மேற்கிலிருந்து ம. ராஜவேல்.
      சரியாக சொன்னீர்கள்,செய்திகள் முடிந்தவுடன் ஒளிபரப்பாகும்.இன்று அது போல வேறு வருகிறதா நண்பரே..!

      Delete
  21. தொடர்ந்து கலக்குங்க mayavi சென்னை பயணம் 9 ஆம் தேதி தானே ?

    ReplyDelete
    Replies
    1. @THIAGARAJAN DURAI

      9 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9:00க்கு பயணம்,10 ம் தேதி சனிக்கிழமை முழுவதும் சென்னையில்...! அன்று இரவு 10:00 க்கு கிளம்பி 11 ம் தேதி ஞாயிறு காலை 6:00 க்கு சேலம்...!

      Delete
  22. அப்பப்பா.. எத்தனைக் கேள்விகள் நண்பரே.. தலைச் சுத்தி விழாதக் குறை தான் :​-)

    வரலாற்றில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறீர்கள், அதற்காக எவ்வளவு உழைப்பையும் தர தயாராக இருக்கிறீர்கள், பாராட்டுகள் மாயாவி சிவா ! ஆனால் நான் அப்படியில்லை நண்பரே, உண்மையில் நான் ஒரு செவ்விந்தியன் ! என் உள்ளுணர்வு என்னக் கூறுகிறதோ, அதை மட்டுமே பதிவிட்டு வருபவன். ''வானமே எங்கள் வீதி'' கதையின் கடைசிப் பக்கத்தைப் படிக்கும் போது, ஹன்னா, 'மாக்ஸ்' என்று கூறுகையில் தான் எனக்கு அப்படித் தோன்றியது !

    ReplyDelete
    Replies
    1. @ மிஸ்டர் மரமண்டை
      நண்பரே...ஏற்காட்டில் நல்ல மழை,தவிர வீடு திரும்ப தாமதமாகிவிட்டது...தங்களுக்கு மெயிலில் தெரிவித்த என் கணிப்பு பற்றிய,கேள்வி பற்றி தங்கள் அபிப்பிராயம் சொல்லவிலையே... :(
      (என்ன செய்ய என் சிந்தனை அப்படி...நான் இடது கைபழக்கம் உள்ளவன்...உங்கள் எழுத்து வலது கை பழக்கம் உள்ளவர் என காட்டுகிறது...நான் சொல்வது புரிந்து கொண்டீருப்பிர்கள்...)

      Delete
    2. மனதில் தோன்றியதை சரியா தவறா என்று யோசிக்காமல் கூட பதிவிட்ட கருத்து அது என்பதே அதன் பொருள் :))

      //நான் இடது கைபழக்கம் உள்ளவன்...உங்கள் எழுத்து வலது கை பழக்கம் உள்ளவர் என காட்டுகிறது...நான் சொல்வது புரிந்து கொண்டீருப்பிர்கள் //

      நீங்கள் பூடகமாகச் சொல்ல நினைக்கும் பொருள் இன்னமும் எனக்குப் புரியவில்லை நண்பரே, யூகத்திற்கு பதிலளிக்கும் போது நம் பதில் பல்லிளித்து விடும் என்பதால், தாங்கள் இன்னமும் தெளிவாக கூற வேண்டும் !

      Delete
    3. சரியாக தான் சொன்னீர்கள்...
      வலது கை பழக்கம் இடது மூளைகார்கள். அதாவது...
      மனதில் பட்டத்தை அழகாக சொல்லும் இடது மூளை பயன்படுத்துபவர் என்ற பொருளில் தான் கூறினேன் நண்பரே...!
      //யூகத்திற்கு பதிலளிக்கும் போது நம் பதில் பல்லிளித்து விடும்//
      என் அழகான வார்த்தை அமைப்பு...அருமை..!
      நீங்கள் இடது மூளையை சரியாக பயன்படுத்துவதில் கில்லாடி என்பதில் சந்தேகமேயில்லை..!

      Delete
  23. அந்த சம்பவம் Pearl Harbour மீது ஜப்பான் குண்டு வீசியது தானே. Pearl Harbour படத்தில் குண்டு வீச ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கும்போது ஒரு வசனம் ஜப்பானிய ஜெனெரல் சொல்லுவது போல வரும் "நாம் தூங்கிக் கொண்டிருக்கும் ராட்சசனை எழுப்புகிரோமோ என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது" என்று.

    எப்போது பேராசை கண்களை மறைக்கிறதோ அப்போது நாமே நம் முடிவை தேடிக் கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. @Raj Muthu Kumar S

      ஜெனெரல் வசனத்தை சூப்பராக நினைவில் வைத்து குறிபபிட்டிர்கள் ராஜ்...!
      இதை பற்றி நாளை இரண்டு பக்கபதிவு போடலாம் என நினைத்துள்ளேன்.

      Delete
  24. இன்னும்... இன்னும்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!

      செத்துப்போன எங்க ஹிஸ்டரி வாத்தியாரின் மறு உருவமா உங்களைப் பார்க்கிறேன் மாயாவி அவர்களே! அவர் ஒரு நடமாடும் 'நீலாம்பரி ராகம்'! ;)

      Delete
    2. அவசர வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். 'நீலாம்பரி ராகத்தை நிறுத்தி ஒருநாள் லீவு தருகிறேன்...! :)
      (லீவு நிபந்தனைக்கு உட்பட்டது...அந்த ஒருநாள் நீங்க நீலாம்பரி ராகத்தை வாசிக்கணும்...ஹீ...ஹீ..)

      Delete
  25. சூப்பர் சர்ர். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ Prapananth Thiruchelvam

      உடல் நலம் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது...நண்பரே...?
      நடக்க முடிகிறதா...? துணைக்கு யார் இருக்கிறார்கள்...? பொழுது எப்படி கழிகிறது...? உற்சாகமான ரெண்டு தகவல்களை தெரிவியுங்கள் நண்பரே..!

      Delete
    2. உடல் நலம் ஒரளவு பரவரயில்லை. சில நிமிட நேரம் எழுந்து நிற்கமுடியும் சர்ர். எப்படியும்
      ஒரு மரதம் பிடிக்கும் என எண்ணுகின்றேன். புத்தங்கள்தரன் ஒரே துணை சர்ர். கலக்கிறீங்க.

      Delete
  26. அருமையான தொடர் பதிவு ; தொடருங்கள் நண்பரே !

    என்னவொன்று சுவாரசியமான புதிய பதிவைப் படிக்கும் சமயத்தில் முந்தைய பதிவுகள் ஒன்றுமே எனக்கு நினைவில் தங்குவதில்லை :) இந்தத் தொடர் முடிந்தவுடன் மொத்தமாக ஒரு முறை படிக்க வேண்டும். பொதுவாகவே எனக்கு வாசிப்பில் ஆர்வும் மிகவும் குறைவு. புதிய காமிக்ஸைக் கூட இரண்டாம் முறை படிக்க இயலுவதில்லை, மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது. இந்தப் பழக்கத்தை எப்படியாவது மாற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள், சுவாரசியமாக இருக்கிறது !

    ReplyDelete
    Replies
    1. @ மிஸ்டர் மரமண்டை
      உங்கள் சூழ்நிலை பற்றிய விளக்கம் படித்தபோது, என் தோழில் கைபோட்டு பகிர்ந்தது போலவே உணர்கிறேன்.எவ்வளவு அழமாக சித்தாந்தம் பேசும் உங்களுக்கு....அயர்ச்சி போக்குதல்,ஆர்வம் கொள்ளுதல் பற்றிய வழிமுறைகள் தெரியாமல் இருக்குமா..என்ன..!
      சோர்வு நீங்கி,ஆர்வம் கூடி, அரிய புத்தகங்கள் படித்து ஆழமான சிந்தனைகளை, எளிமையாக எங்களுக்கு சொல்லவேண்டுகிறேன்!
      பின்னாளில் கடைபிடித்த வழிமுறைகள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பரே..!

      Delete
  27. மாயாவிஜி!!!!!!!!.......அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.....என்றாலும்....
    சில விளக்கங்களும் ..சில தெளிபுகளும்......
    1. ENGELBERT DOLLFUSS படுகொலை....(.வரலாற்றில் JULY PUTSCH என்று அழைக்கப்படுகிறது) இந்த ஆஸ்திரிய CHANCELLOR ஜூலை 25,1934-ல் ஆஸ்திரிய நாஜிகளால் அவர் அலுவலக வளாகத்தில் கொல்லப்பட்டார்.
    இதை நடத்திய நாஜி முக்கியஸ்தர்கள்..
    PAUL HUDI
    FRANZ HOLZWEBER
    OTTO PLANETTA மற்றும் பலர்.
    இதில் எந்த விதத்திலும் otto skorzeny சம்பந்தபடவில்லை.அப்போது அவர் எங்கிருந்தார்?....
    தனது இளம்மனைவியுடன் தேன்நிலவு கொண்டாடி கொண்டு இருந்தார்..எங்கே?.........
    ஆஸ்திரியாவில் பாசிஸ கொள்கையை நடைமுறை படுத்தும் அளவு முஸோலினியுடன் மிகவும் நெருக்கமாயிருந்த ENGELBERT DOLLFUSS படுகொலையால் கோபமுற்ற முஸோலினி அதற்கு otto skorzeny எந்தவிதத்திலாவது காரணம் என கருதியிருந்தால் அவரை வேறு எங்கும் தேடிஇருக்க வேண்டிய அவசியமே இல்லை..
    otto skorzeny அப்போது இத்தாலியின் gran sasso பகுதிக்கு அருகிலுள்ள abuzzi பிராந்தியத்தில்தான் honeymoon –ஐ மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் பயணித்து NAPLES வரை சென்று அனுபவித்து மகிழ்ந்து இருந்தார்.
    ஆஸ்திரிய நாஜிக்களின் செயல்பாடுகளில் otto skorzeny- ன் பங்களிப்பு ஏதும் இல்லை...குறிப்பாக ENGELBERT DOLLFUSS படுகொலையில்.....
    இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரியா மார்ச் 1938-ல் ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டபோது ஆஸ்திரிய நாஜிக்கள் அப்போது PRESIDENT.ஆக இருந்த WILHELM MIKLAS-ஐ 1934 ENGELBERT DOLLFUSS படுகொலையில் தொடர்புடைய ஆஸ்திரிய நாஜிக்களின் தண்டனையை குறைக்க முயற்சி செய்யவில்லை என அவரை கொலை செய்ய முயன்றதை தடுத்து நிறுத்தியவர் otto skorzeny
    2.மற்றுமோர் விஷயம்.....நமது கதை நடப்பது 1944-ல். உண்மையாகவே ஹன்னா TRIAL பார்க்கும் REICHENBERG FEISSLER FJ 103 விமானம் 1944-ல் தான் உற்பத்தி செய்யபட்டது....
    முசோலினியை otto skorzeny சிறையில் இருந்து காப்பாற்றியது செப்டம்பர் 12, 1943….( விசித்திரம்...அவர் தேன்நிலவு கொண்டாடிய அதே GRAN SASSO பகுதியில்தான் முஸோலினி சிறை வைக்க பட்டு இருந்தார்) எனவே சில மாதங்கள் முன்பு நடந்த நிகழ்வை பற்றி அந்த இளம் சிறார் படை பேசியிருப்பதுதானே பொருத்தமானது..
    3.முஸோலினியும் ஹிட்லரும் ஆரம்பத்தில் எதிரிகளா?....
    ஹிட்லர் அதற்கு வாய்ப்பே தரவில்லை...முசோலினியை ஹிட்லர் பெரிதும் மதித்தார்...பின்னாளில் அந்த மதிப்பு குறைந்தபோதும் முசோலினியை அவர் பகைக்க விரும்பவில்லை....ஐரோப்பிய படையெடுப்புக்கு இத்தாலி வசமிருந்த கடல் துறைமுகங்கள் அவருக்கு தேவைப்பட்டதும் ஓர் முக்கிய காரணம்...
    ENGELBERT DOLLFUSS படுகொலைக்கு பின் முசோலினியின் கோபம் ஜெர்மனி ஆஸ்திரியாவில் கால் வைத்தால் போர் தொடுப்பேன் என சொல்லுமளவிற்கு போனது உண்மைதான்....அப்போது ஹிட்லர் செய்தது என்ன?
    ENGELBERT DOLLFUSS மறைவ்ற்கு வருத்தம் தெரிவித்தார்..
    சம்பந்தபட்ட ஆஸ்திரிய நாஜிக்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவித்தார்.
    சம்பந்தபட்ட ஆஸ்திரிய நாஜிக்கள் ஜெர்மனிக்குள் நுழையாவண்ணம் எல்லைகள் மூடப்படும் என அறிவித்தார்.
    இதற்கும் ஜெர்மனிக்கும் தொடர்பு இல்லை என அறிவித்தார்...

    பின்னாளில் 1938-ல் ஆஸ்திரியாவை இணைப்பதற்கு முன் முசோலினியின் சம்மதம் பெற்ற பின்னரே செய்தார்.....
    ( அன்புடன்........

    ReplyDelete
    Replies
    1. @ selvam abirami

      செல்வம் அபிராமி அசத்திவிடீர்கள்...அட்டகாசம்...பிரமாதமான விளக்கம்! என் முடிவுக்கு காரணங்களை சொன்னால் இன்னும் அற்புதமான விஷயங்களை நீங்கள் எனக்கு விளக்குவீர்கள்.
      எனக்கு 9 மணிக்கு கரண்ட போய்விடும்,இரவு 7 க்கு தான் வரும்,அடுத்த பதிவு வேலை இப்போது முடிக்கவேண்டியிருப்பதால் இரவு எழுதுகிறேன்!

      Delete
    2. அம்மாடி!!! என்ன ஒரு விளக்கம்!!!!!!!!!!!!!!

      Delete
  28. மாயாவிஜி !!!!! பேர்ல் ஹார்பர் படங்களும் ,விளக்கங்களும் அருமை !!!!!

    ReplyDelete
  29. உண்மை என்னன்னா வானமே எங்கள் வீதியை விடவும் இந்த பதிவும் ,பின்னூட்டங்களும் படு சுவாரசியம் ...
    அடுத்த பாகத்தில் ட்ரைலராக இந்த பதிவை இணைத்தால் சூப்பராக இருக்கும்.

    அப்புறம் ஒரு கொசுறு தகவல்
    ஹிட்லருக்கு யூதர்களை கொல்ல சயனைடு வாயு சப்ளை செய்த நிறுவனங்களில் இன்றைக்கு புகழ்பெற்ற SEIMENS நிறுவனமும் ஒன்று .

    (அப்பாடா நம்மளுக்கும் STD தெரியுமுன்னு நம்பிடுவாங்க...:P)

    ReplyDelete
    Replies
    1. @ Rummi XIII

      வியாபாரிகளுக்கு வியாபாரம் தான் குறி. விளைவு,உயிர்களின் மதிப்பு பற்றி அவர்களுக்கு கவலையில்லை...என்பதை தகவல் முலம் அழகாக புரியவைத்துவிட்டது,ரமேஷ்...வேறு தகவல்களையும் பரிமாறுங்கள்...!

      Delete
  30. ஹன்னாவைப் பற்றிய தகவல்கள் உண்மையானவை என்றரிய வரும்போது பிரம்மிக்காமல் இருக்கமுடியவில்லை.
    கிராஃபிக் நாவல்களின் மீது ஒரு பயம் கலந்த மரியாதையும் தானாகவே ஏற்படுகிறது.

    தேடிப்பிடித்து விஷூவல் விருந்து படைக்கும் மாயாவிக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
    Replies
    1. @ Erode VIJAY

      * ஜெர்மானிக்கு 1933-ல் பிரதமர் ஆன ஹிட்லர் 1932-ல் தான் ஜெர்மனி குடியுரிமையே பெற்றார்.
      * 10 லட்சத்திற்கும் மேல் இருந்த வேலையில்ல நிலையை,ஒரே வருடத்தில் ஒருவர் கூட இல்லாமல் ஹிட்லர் தன் சட்டங்களால் மாற்றியது.
      * பல ஆயிரத்துக்கும் நீளமான அட்டகாசமான தார் ரோடுகள்.
      * எல்லோரும் காரில் செல்லவேண்டுமென, கார் உற்பத்தியை உச்சத்திற்கு கொண்டுசென்றது.
      * ஒரு 'டாஸ்மார்க்' 'ரெட் லைட்' 'கேசினோ' என ஒன்று கூட இல்லாமல் ஒழித்தது.
      * போரில் பயன் படுத்திய விமானங்கள்...
      * அமெரிக்கா நான்கு வருடம் ஜப்பானுடன் போரிட்டும், பெரிய பலன் கிடைக்காமல் ஆத்திரத்தில் சில மணிக்குள் 3-1/2 லட்சம்பேருக்கும் மேல் சாம்பலாக்கி, ஒரு ஊரையே பெரிய 'சுடுகாடு' ஆக்கியது.
      என தகவல் பட்டியல் நீள்கிறது, படித்து படித்து சோர்ந்து விட்டேன். ...ம்....எல்லோரும் உற்சாகப்படுத்தும் இந்த வேளையில் வேறு வழியில்லாமல் நாளையுடன் இந்த பதிவை முடிக்கிறேன் நண்பரே...!

      Delete
  31. டியர் மரயரவி சர்ர்,
    "ஒரு உண்மைக் கதையை நரன் படிக்க உள்ளேன் எனும்போது மெய்சிலிக்கிறது. அதுவும் ஹன்னர பரத்திரம் உண்மை என்று கண்டறிந்து சொன்ன உங்களுக்கு நன்றிகள் பல.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
    Replies
    1. @ Prapananth Thiruchelvam

      ஹன்னாவை பற்றி கொஞ்சம் தகவல் நெட்டில் பார்த்திருந்தாலும், அதை அதிகபடுத்திய பெருமை...நண்பர் செல்வம் அபிராமிக்கு தான்...!
      அவர்தான் lion பிளாக்கில் 'லிங்க்' கொடுத்து ஆர்வத்தை தூண்டிவிட்டார்....!


      Delete
  32. 70 வருடங்களுக்கு முன்பே ஆளில்லா விமானங்களும், தொலைதூர ஏவுகனைத் தாக்குதல்களும் எப்படித்தான் சாத்தியமாகியதோ!! அப்போதே GPS சாதனங்கள் இருந்திருக்குமா என்ன?! ஆச்சர்யம்தான்!!

    ReplyDelete
    Replies
    1. @ Erode VIJAY

      டெக்னாலஜி ஒரு பக்கக்கமெனில் உற்பத்தி அரக்கத்தனமானவை...பிப்ரவரி 1944 ல் 36,000 பாம் ஜெர்மன் மீது போட்டபின்....நான்கு மாதத்தில் ஜெர்மனி மீண்டும் தயாரித்து,இங்கிலாந்து மீது ஏவிய V-1 ராக்கெட் பாம் எவ்வளவு தெரியுமா... மொத்தம் 9,521 ராக்கெட்டுகள்....

      Delete
  33. வாழ்த்துக்கள் வேதாள மாயாத்மா.!
    இந்த தேடலுக்கு தாங்கள் செலவிட்டுருக்கும் நேரத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.
    இன்னும் நான்காண்டுகள் தொடரப்போகும் இந்த கதைக்கு உங்களின் பங்களிப்பு நிச்சயம் நல்ல துணைப்பாடமாக இருக்கும்.
    மீண்டும்
    வாழ்த்துக்கள் வேதாள மாயாத்மா.!

    ReplyDelete
    Replies
    1. @ கிட் ஆர்ட்டின் KANNAN

      உண்மைதான் நிறையவே நேரம் முதலிடு செய்துள்ளேன்.பலன் அருமையான மனநிறைவு...! பாரட்டுக்கு நன்றிகள் கண்ணன்..!!

      Delete
  34. வியப்பில் ஆழ்த்தும் தகவல்கள் !!!...விழிகளை பெரிதாக்கும் புகைப்படங்கள் !!!!

    அற்புதம் மாயாவிஜி !!!!!!

    ReplyDelete
    Replies
    1. @selvam abirami

      நீங்கள் ஏற்கனவே E-மெயிலில் படித்தவைதானே...! படங்கள் உங்களுக்கு கொடுத்த லிங்கில் டவுன்லோட் செய்தவைகள்.உண்மையில் உங்கள் வாதம் தான் அற்புதம்..!

      Delete
    2. நண்பர்கள் மத்தியில் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் மாயாவிஜி !!!

      Delete
  35. தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் சார் ....வாழ்த்துக்கள் ....

    ***********************

    தாங்கள் வினவிய படி காமிக்ஸ் பெயர் ...நாயகர் பெயர் இணைத்து ...இந்த வருட லிஸ்ட் சார் ...

    ************************

    தங்கள் உதவிக்கு மிக பெரிய நன்றி சார் ...

    *************************

    ReplyDelete
    Replies
    1. உறுப்பினருக்கு எதற்கு நன்றி எல்லாம் தலைவரே...! இது கடமையல்லவா...! :)

      Delete
  36. டியர் மரயரவி சர்ர்,
    ஒவ்வொரு நரளும் மெய்சிலிக்க வைக்கிறீர்கள். இடையில் நிறுத்தரமல் தொடருங்கள் சர்ர்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  37. What a hard and excellent work
    what drives a man to do this kind of hard work,?
    Interest and passion !!!
    Thanks to comic writers

    ReplyDelete
    Replies
    1. @ sai vignesh

      thanks for your valuable comments...!

      Delete
  38. உங்களின் வரலாற்று ஆராய்ச்சித் தாகம் தொடரட்டும் நண்பரே வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. @ கருவூர் சரவணன்

      நன்றிகள் நண்பரே! வா.எ.வீ கதையை ஜாலியாகத்தான் படித்தேன்.ஆராய்ச்சிக்கு காரணம் புத்தகம் கைக்குகிடைத்த நாள்.டிசம்பர் 7.
      இதே நாளில்தான் 'பியரல் ஹார்பர்' தாக்குதல் நடந்தது. அடடே...இந்த கதைக்கு வேறேன்ன என்ன தொடர்புகள் என சின்னதாய் தேடியவை..கொஞ்சம் நீண்டுவிட்டது...!

      Delete
  39. அட! அதே மாதிரியான விமானங்கள்!!!

    ஒரே வருடத்தில் 1,14,000 விமானங்கள் தயாரிக்கப்பட்டதா!! அம்மாடியோவ்!!

    சுவையான எஸ்டீடிக்கு நன்றி மாயாவி அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. 1944 ல் தான் போர் உக்கிரமாகவும் நடந்தது.அந்த வருடம் மட்டும் அமெரிக்க ராணுவ வீரர்கள் மட்டும் 88,000 பேர் யுத்தத்தில் இறந்தார்கள்...!

      Delete
  40. தகவல் தகவல் மேலும் தகவல்.!
    வெறும் பாராட்டுக்கள் போதாது.!
    வேறு என்ன செய்ய முடியும்.
    வாழ்த்துக்கள் வேதாளரே.!
    தொடரட்டும் உங்கள் தாகம்.!
    நிறையட்டும் உங்கள் நெஞ்சம்.!

    ReplyDelete
    Replies
    1. தகவல்...வெறும் தகவல், இதற்கு பாராட்டே அதிகம்...!
      வாழ்த்தெல்லாம் காமிக்ஸ் உலகிற்கு தான் சொல்லவேண்டும்,வளரட்டும் தமிழ் காமிக்ஸ் உலகம்+தாகம்+நட்புகள்...!

      Delete
  41. தகவல் தகவல் மேலும் தகவல்.!
    வெறும் பாராட்டுக்கள் போதாது.!
    வேறு என்ன செய்ய முடியும்.
    வாழ்த்துக்கள் வேதாளரே.!
    தொடரட்டும் உங்கள் தாகம்.!
    நிறையட்டும் உங்கள் நெஞ்சம்.!

    ReplyDelete
  42. அருமை.தொடருங்கள்.Hintler list,,கடைசிவரை இஸ்ரேல் உளவுத்துறையின் கண்ணில் மண்ணைதூவி சிக்காமல் மரணமடைந்த Dr death பற்றியும் பகிரலாமே.?

    ReplyDelete
    Replies
    1. @ karthik karthik

      கதையை தாண்டி சொன்னால் நன்றாக இருக்காது கார்த்திக். ஏற்கனவே சேர்த்து சொல்லிவிட்டதாக நினைக்கிறேன். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அலசலாம்...!

      Delete
  43. வாவ் சூப்பர் மாயாவி ஜி

    வழக்கம் போல பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க

    நமக்கும் வரலாறுக்கும் ஒரு 2500 km இருக்குமுங்கோவ்

    நமது நண்பர்கள் மற்றும் நீங்கள் சொல்லியது போல
    இதுபோல படம் வரைந்து பாகம் குறித்து விரிவாக சொல்லி இருந்தால்
    நமக்கும் கொஞ்சமேனும் புரிந்திருக்கும் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    இருந்தாலும் உங்கள் தன்னார்வம் மெய் சிலிர்க்க வைக்கிறது நண்பரே

    வாழ்த்துக்கள் கலக்குங்கள் ஜி :))
    .

    ReplyDelete
  44. @ Prabakar T

    சிபி நீங்களா இப்படி...
    //நமக்கும் வரலாறுக்கும் ஒரு 2500 km இருக்குமுங்கோவ் // என சொல்வது ஆச்சரியமாக உள்ளது. சுவைக்காக சொன்னதாவே எடுத்துக்கொள்கிறேன்...!

    ReplyDelete
  45. மிஸ்டர் மரமண்டை,

    கவனிக்கவும். என்னுடைய முதல் கமென்ட்டை டெலீட் செய்துவிட்டதால், இதுதான் நூறாவது கமென்ட்.

    ReplyDelete
  46. தமிழ் காமிக்ஸ் உலகில் எல்லோருக்கும் தெரிந்த முதலிடத்தில் உள்ள நண்பரும், அதே உலகில் யாருக்கு தெரியாதவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நண்பரும் இங்கு நூறாவது கமெண்டடில் அழங்கரிப்பது எனக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு...!

    ReplyDelete
  47. மாயாவியின் தகவல் திரட்டும், அதைத் தொகுத்த விதமும், கண்ணுக்குக் குளிர்ச்சியான கிராஃபிக் வேலைகளும் வியக்க வைக்கின்றன. மறுபடியும் ஒருமுறை புத்தகத்தைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை ஒப்பீடு/உணர முயற்சிக்கிறேன். இப்போதைக்கு மலைத்து நிற்பதைத் தவிர நான் செய்யக்கூடியது வேறொன்றுமில்லை!

    இரண்டு பாகங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் இக்கதைக்கே இவ்வளவு தகவல்கள் என்றால், இரத்தப் படலம் ரேஞ்சுக்கு இது இழுத்துக்கொண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது என்று சில நண்பர்கள் கூறுவதைக் கேட்டால் பகீர் என்கிறது! ;)

    ம்ம்ம்... 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' படித்துவிட்டீர்களா மாயாவி அவர்களே?

    ReplyDelete
    Replies
    1. முதலில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ..! 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' இன்னும் படிக்கவில்லை விஜய்...! இந்த விடுமுறையில் பயணத்தில் படித்துவிடுகிறேன்...!

      Delete
  48. நல்ல முயற்சி, நிறைவான தகவல்கள்! நீங்கள் என்ன வரலாற்றை பாடமாக எடுத்து படித்தீர்களா? வரலாற்று தகவல்கள் எல்லாம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. இல்லை பரணி...நான் படித்த, பிடித்த, ஒரே வரலாறு...மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்' மட்டுமே...! அதே பாணியில் ரெண்டு செய்து பார்த்தேன்,ஓகேரகத்தில் தோன்றியது. இதற்கு கேலி,கிண்டல்,செய்து தகவல்களை அள்ளி தெளித்து கேள்விகள் வரும் மன்னிப்பு கேட்டு,எஸ்கேப் ஆகிவிடலாம் என நினைத்தேன்.
      அப்படிஎதுவும் நடக்கவில்லை.ஆர்வத்தில் வழியில்லாமல் மாட்டிக்கொண்டு ஒருமாதிரியாக முடித்துவிட்டேன்...! பாராட்டுக்கு நன்றிகள் பரணி..!
      (அடுத்து 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' படித்துவிட்டு சிக்கபோகிறேனோ...)

      Delete
  49. டியர் மரயரவி சர்ர்,
    புத்தகம் என்கைக்கு வருமுன்பே இவ்வளவு வரலரற்று தகவல்களர? புத்தகம் எப்போது கிடைக்கும் என ஆவலரக உள்ளேன். 3 ம் பரகம் எப்போது வரும் என ஆவலரக. உள்ளேன்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete